Join Our Whats app Group Click Below Image

ஆசிரியர்கள் சார்பாக -பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 ஆசிரியர்கள் சார்பாக -பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை


 விடுப்பு..!!

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க ஆசிரியர்கள் சார்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவின் முதல் மற்றும் 2-வது அலையின் போது பள்ளி வகுப்புகள் ஆன்லைன்(online) மூலம் நடத்தப்பட்டு வந்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கல்வியை சரியான முறையில் பெறாமல் இருந்து  வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா 2-ம் அலையின் இறுதி கட்டத்தில் ,கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் தமிழக அரசு  பள்ளிகளையும், கல்லூரிகளையும் மீண்டும் தொடங்கியது. இதையடுத்து மீண்டும் 3-வது அலை பாதிப்பினால் பொங்கல் விடுமுறைக்கு பின் 15 நாட்கள் பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும்  மூடப்பட்டது. அதன்பின் பிப்ரவரி தொடக்கம் முதல் தமிழகத்தின் அனைத்து பள்ளிகளும் முழுமையாக மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கிய பள்ளிகள் தொடர்ந்து 6 நாட்களும் செயல்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக அறிவித்து இருந்தனர். இதனால் பள்ளிகள் சனிக்கிழமைகளிலும் இயங்கி வருகிறது. தற்போது பொதுத்தேர்வுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மாணவர்களின் வருகை எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆகவே மீண்டும் முன்பு இருந்ததைப் போன்றே வாரத்தில் இரு நாட்கள் விடுமுறை(சனி, ஞாயிறு) கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சார்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments