Join Our Whats app Group Click Below Image

விஷ ஜந்துக்கள் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவிகள்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 விஷ ஜந்துக்கள் கடித்தால்  செய்ய வேண்டிய முதலுதவிகள். இந்த முதலுதவி செய்த பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி, மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

கண்ணாடி விரியன்:

பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும். சற்றே விசத்தின் வீரியத்தை குறைக்கும். உடனே மருத்துவரை அணுகவும்.

நல்ல பாம்பு:

வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி பாம்பு தீண்டிய வரை படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாற்றை உள்ளுக்குள் உட்கொள்ளச் செய்யவும்.

தேள்:

தேள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும், சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து நன்கு தேய்க்கவும். சிறிது நேரத்தில் வலி குறையும்.

வண்டு:

கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து நன்கு மென்று  சாரத்தை உள்ளே விழுங்கவும். தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்தலாம்.

சிலந்தி:

ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும். நிவாரணம் தரும்.

வெறிநாய்:-

மஞ்சளையும், பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும். பிறகு மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.

எலி:

வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:

தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துகுடிக்கவும். ஒரு வாரம் காலை, மாலை இரு வேளையும் பருகினால் குணமாகும்.

பூரான்:-

பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்கலி:-

கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தை எனில் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.


இது அவசர உதவி மட்டுமே . இந்த முதலுதவி செய்த பிறகு மருத்துவரின் ஆலோசனைப்படி, மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.



Post a Comment

0 Comments