Join Our Whats app Group Click Below Image

TNPSC:TAMIL: நூல் - ஆசிரியர்,POLITY:தலைமைச் செயலக பணிகள் பற்றிய குறிப்புகள்,

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

TNPSC:TAMIL: நூல் - ஆசிரியர்,POLITY:தலைமைச் செயலக பணிகள் பற்றிய குறிப்புகள்,

தலைமைச் செயலக பணிகள் பற்றிய குறிப்புகள்!

தலைமைச் செயலர் மாநிலச் செயலகத்தின் செயல்துறைத் தலைவராக உள்ளார் .

மாநில நிர்வாகத்தின் நிர்வாகத் தலைவராக அவர் உள்ளார் . மற்றும் மாநில நிர்வாகப் படிநிலையின் உச்சத்தில் நிற்கிறார் .

உண்மையில் , அவர் அனைத்துச் செயலர்களின் தலைவராக இருந்து அனைத்துத் துறைகளையும் கட்டுப்படுத்துகிறார் .

அவர் மாநிலத்தில் மிகவும் மூத்த சிவில் பணியாளராக இருக்கிறார் . மாநில அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட செயல் விதிகளில் குறிப்பிட்டுள்ள அதிகாரங்களையும் , பணிகளையும் அவர் பெற்றுள்ளார் .

அவர் பின்வருகின்ற பிரதான பணிகளையும் , மற்ற பணிகளையும் செய்கிறார் .முதலமைச்சருக்கு ஒரு ஆலோசகராக மாநில அமைச்சர்களால் அனுப்பப்படும் முன்வரைவுகளின் நிர்வாக உள்ளடக்கங்களை தலைமைச் செயலர் விளக்குகிறார் .

அமைச்சர் குழுவிற்கு செயலராக அமைச்சர் குழு கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலை அவர் தயாரிக்கிறார் . மற்றும் அதன் செயல்பாடுகளின் பதில்களைப் பாதுகாக்கிறார் .

சிவில் பணியின் தலைவராக மூத்த மாநில சிவில் பணியாளர்களின் நியமனம் , இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு தொடர்பானவற்றை அவர் கவனிக்கிறார் .

தலைமை ஒருங்கிணைப்பாளராக துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை நோக்கி அவர் பணிபுரிகிறார் .

 துறைகளுக்கிடையேயான சிக்கல்களைப் போக்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருக்கிறார் .

சில குறிப்பிட்ட துறைகளின் தலைவராக அவைகளை மேற்பார்வையிடுகிறார் . மற்றும் கட்டுப்படுத்துகிறார் .

சிக்கல் தீர்க்கும் நிர்வாகியாக வெள்ளம் , வறட்சி , இனக் கலவரங்கள் போன்ற சிக்கலான நேரங்களில் மிகவும் முக்கிய பங்கில் அவர் செயல்படுகிறார் .

 மற்ற பணிகள்

துறைகளுக்குள் அடங்காத அனைத்து விவகாரங்களையும் தலைமைச் செயலர் கவனிக்கிறார் .

ஒட்டுமொத்த செயலகத்தின் மீதான பொது மேற்பார்வை மற்றும் கட்டுபாட்டை அவர் செயல்படுத்துகிறார்.

தொடர்புடைய மாநில உறுப்பினராக உள்ள மண்டலக் கவுன்சிலின் செயலராக சுழற்சி முறையில் அவர் செயல்படுகிறார் .

செயலகக் கட்டடம் , அமைச்சர்களுடன் தொடர்புடைய பணியாளர்கள் , செயலக நூலகம் மற்றும் செயலகத் துறைகளின் பணியாளர்கள் மீதான நிர்வாகம் கட்டுபாட்டை அவர் பெற்றுள்ளார் .

மாநில அரசாங்கம் , மத்திய அரசாங்கம் மற்றும் பிற மாநில அரசாங்கங்கள் போன்றவைகளுக்காக தகவலின் பிரதான வழியாக அவர் இருக்கிறார் .

தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் கூட்டங்களில் அவர் கலந்து கொள்கிறார்.

மாநில அரசாங்கத்தின் தலைமை பொதுமக்கள் தொடர்பு அலுவலராக அவர் செயல்படுகிறார் .

மற்றும் அரசியலமைப்பு விதி 356 ன் படி மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்படும் போது , மத்திய ஆரோசகர்கள் நியமிக்கப்படாமல் இருக்கும்போது ஆளுநருக்கு முதன்மை ஆலோசகராக அவர் செயல்படுகிறார் .

இவ்வாறாக மொத்தத்தில் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் மாநில நிர்வாகத்தின் நரம்புமண்டலமாக இருக்கிறது . இதேபோல , தமிழ்நாட்டில் அனைத்துச் செயலர்களின் தலைவராக உள்ள தலைமைச் செயலர் குறிப்பாக செயலக நிர்வாகத்தின் நரம்பு முறைமையாக இருக்கிறார்.

நூல் - ஆசிரியர் எளிதில் நினைவில் கொள்ள

      ------------பூக்கள்---------------


1.உதிரி பூக்கள் - உலகநாதன்

2.புரட்சி பூக்கள் - புலமைப்பித்தன்

3.சுடு பூக்கள் - இரா.மீனாட்சி

4.புன்னகை பூக்கள் - பொன்னடியான்

5.கண்ணீர் பூக்கள் - மு.மேத்தா

6.சிரிக்கும் பூக்கள் - அழ.வள்ளியப்பா

7.காகித பூக்கள் - மு.கருணாநிதி

-----------விளக்கு-------------

1.அகல் விளக்கு - மு.வரதராசனார்

2.பாவை விளக்கு - அகிலன்

3.குடும்ப விளக்கு - பாரதிதாசன்

4.இரட்டை விளக்கு - ந.பிச்சைமூர்த்தி

5.கொடிவிளக்கு - இரா.மீனாட்சி

6.கோபுர விளக்கு - தி.ஜானகிராமன்.

7.கை விளக்கு - ராஜாஜி.

8.மா விளக்கு - பெரியசாமி [பெ.தூரன்]

------------இரவு----------------

1.ஓர் இரவு - அண்ணா

2.எச்சில் இரவு - சுரதா

3.அன்று இரவு - புதுமைப்பித்தன்

4.முதலில் இரவு - ஆதவன்

5.இரவில் - ஜெயகாந்தன்

6.இரவு வரவில்லை - வாணிதாசன்

7.கயிற்றிரவு - விருத்தாசலம்

8.இன்றிரவு பகலில் - கவிக்கோ

------------வாசல்------------------

1.மலை வாசல் - சாண்டில்யன்

2.வார்த்தை வாசல் - சுரதா

3.வாடி வாசல் - சி.சு.செல்லப்பா

4.சொர்க்க வாசல் - அண்ணா.

------------விஜயம்-----------------

1.மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்

2.மதுரா விஜயம் - கங்கா தேவி

3.கமலா விஜயம் - வ.வே.சு.ஐயர்

--------------காரி----------------

1.வேலைக்காரி - அண்ணா

2.பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி

3.நாட்டியக்காரி - வல்லி கண்ணு

4.நாடகக்காரி - கல்கி.

------------முத்தம்--------------

1.சாவின் முத்தம் - சுரதா

2.எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்.

3.ஒரே முத்தம் - மு.கருணாநிதி

--------------பரிசு------------------

1.நன்றி பரிசு - நீலவன்

2.பாண்டியன் பரிசு - பாரதிதாசன்

3.பொங்கல் பரிசு - வாணிதாசன்

--------------மலர்---------------

1.கறுப்பு மலர் - நா.காமராசன்

2.வாடா மலர் - மு.வ

3.பொன் மலர் - அகிலன்

4.குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி

-------------பூ-----------------

1.சூரியகாந்தி - நா.காமராசன்

2.செண்பகப்பூ - சுஜாதா

3.செம்பருத்தி - தி.ஜானகிராமன்

4.கனகாம்பரம் - கு.பா.ரா.

5.செந்தாமரை - மு.வ

-----------கோல்--------------

1.ஊன்றுகோல் - முடியரசன்

2.செங்கோல் - மா.பொ.சிவஞானம்.

-----------கோட்டம்-------------

1.காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்

2.பத்தினி கோட்டம் - ஜெகசிற்பியன்

3.குணவாயிற் கோட்டம் - மணிசேகரன்.

-------------கனி--------------

1.மாங்கனி - கண்ணதாசன்

2.கொய்யாக் கனி - பெருஞ்சித்திரனார்

3.செவ்வாழை - அண்ணா

4.நாவற்பழம் - நா காமராசன்

5.நெருஞ்சிபழம் - குழந்தை

6.ஆப்பிள் கனவு - நா காமராசன்

7.பலாப்பழம் - அசோகமித்ரன்

8. நெல்லிக்கனி - வ சுப மாணிக்கம்

---------இலக்கியம்-------------

1.குழந்தை இலக்கியம் - வாணிதாசன்

2.இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்.

-----------மகன்------------

1.தேரோட்டியின் மகன் - தகலி சிவசங்கர்

2.தோட்டியின் மகன் - அண்ணா

3.மண்னின் மகன் - நீலம் பத்மநாபன்

4.இளைய மகன் - சிற்பி

5.போலீஸ்காரன் மகன் -பி.எஸ்.இராமையா

6.வண்டிக்காரன் மகன் - மு.கருணாநிதி

7.புலவர் மகன் - பூவண்ணண்

8.மகன் -ஜெயபிரகாசம்.

-----------வீடு--------------

1.மணல் வீடு - சி.சு செல்லப்பா

2.இருண்ட வீடு - பாரதிதாசன்

3.ஆகாயத்திற்கு அடுத்த வீடு - மு.மேத்தா

4.மாற்றப்படாத வீடு - தேவதேவன்.

----------இதயம்--------------

1.தமிழன் இதயம் - நாமக்கல் கவி

2.உளுத்த இதயம் - வை.மு.கோதைநாயகி.

Post a Comment

0 Comments