ஆசிரியர் தினத்தையொட்டி ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, நல்லாசியருக்கான விருதை வழங்கினார் - மு.க.ஸ்டாலின்..!!
ஆசிரியர் தினத்தையொட்டி 2020-2021 ஆம் கல்வியாண்டில் 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும், 15 ஆசிரியர்களுக்கு நல்லாசியருக்கான விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை சேர்ந்த 15 பேருக்கு 'டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதை முதலமைச்சர் வழங்கினார். நாடு முழுவதும் இன்று டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
அதேபோல் சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பாக பணியாற்றும் 389 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருதை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கினார்.
அதேபோன்று, அரசு, நகராட்சி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட 52 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக மூன்று பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் வழங்கினார்.
0 Comments