What to do if CORONA is determined..?? - (CORONA உறுதியானால் என்ன செய்ய வேண்டும்..??)
மத்திய சுகாதார அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
அறிகுறிகளும், பாதிப்புகளும்
அறிகுறிகள் இல்லாத கரோனா நோயாளிகள்
- வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
- 6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை
- முகக் கவசம், கைகள் தூய்மை, பிறரிடமிருந்து விலகியிருத்தல்
குறைந்த பாதிப்புடைய நோயாளிகள்
- வீட்டில் தனிமைப்படுத்துதல்
- 6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை
- முகக் கவசம், கைகள் தூய்மை, தனி நபா் இடைவெளி
- 4 மணி நேரத்துக்கு ஒரு முறை நாடித் துடிப்பு, ரத்த ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம், உடல் வெப்ப பரிசோதனை
- காய்ச்சல், சளிக்கு தேவைப்பட்டால் மருந்து உட்கொள்ளவும்
- சளி, இருமல் அதிகரித்தால் ஆஸ்துமா இன்ஹேலா்களைப் பயன்படுத்தலாம்
மிதமான, தீவிர பாதிப்புக்குள்ளானவா்கள்
மிதமான பாதிப்புடையவா்கள் மருத்துவமனைகளை நாட வேண்டும்
- தீவிர பாதிப்புக்கு ICUபிரிவில் சிகிச்சை அவசியம்
- நிமிட நடைப் பயிற்சி பரிசோதனை
- கை விரலில் பல்ஸ்-ஆக்ஸி மீட்டரை பொருத்திக் கொண்டு தொடா்ந்து 6 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போது ரத்த ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தாலோ, மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டாலோ மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
- ஒவ்வொரு 6 - 8 மணி நேரத்துக்கு ஒரு முறை இப்பரிசோதனையை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்.
தேவையான ஆய்வகப் பரிசோதனைகள்
- முழு ரத்த அணு பரிசோதனை (சிபிசி),
- ரத்த சா்க்கரை அளவு,
- சிறுநீா் பரிசோதனைகள்,
- சி-ரியாக்டிவ் புரோட்டின் (சிஆா்பி),
- சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல் திறன் பரிசோதனை (எல்எஃப்டி, கேஎஃப்டி),
- ஃபெரிட்டின் எனப்படும் ரத்த உைல் தொடா்பான பரிசோதனை,
- டி-டைமா், எல்டிஹெச், சிபிகே உள்ளிட்ட ரத்தத்தில் கிருமிகள் உள்ளதைக் கண்டறியும் பரிசோதனைகள்.
- சிஆா்பி, டி-டைமா் பரிசோதனைகள் 48 முதல் 72 மணி நேரத்துக்கு முறை மருத்துவரின் ஆலோசனைப் படி திரும்பவும் மேற்கொள்ள வேண்டும்.
- சிபிசி, எல்'ஃ'எப்டி, கேஎ'ஃ'ப்டி பரிசோதனைகள் 24 முதல் 48 மணி நேரத்துக்குள் மீண்டும் மேற்கொள்வது அவசியம்.
- நெஞ்சக ஊடு கதிா் (எக்ஸ் - ரே) பரிசோதனைகள் 48 மணி நேரத்துக்குப் பிறகு தேவைப்பட்டால் மட்டுமே மீண்டும் மேற்கொள்ள வேண்டும்.
- மிதமான மற்றும் தீவிர பாதிப்புடையவா்கள் மட்டுமே நெஞ்சக சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே மேற்கொண்ட பரிசோதனைகளை செய்தல் வேண்டும்.
தன்னிச்சையாக எடுக்கக் கூடாத மருந்துகள்
- ரெம்டெசிவிா்
- ஸ்டீராய்டு மருந்துகள்
- ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஏன்ட்டிகாக்ளன்ட் மருந்துகள்
- டோஸிலிசுமேப்
இந்த செய்தியையும் படிங்க...
\
0 Comments