PF கணக்கில் AADHAAR இணைக்க SEPTEMBER 1-ந் தேதி வரை கால நீட்டிப்பு :மத்திய அரசு உத்தரவு..!!
சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தின் 142-வது பிரிவில் கொண்டு வரப்பட்ட புதிய விதியின் படி ஊழியர்களின் PF கணக்கு எண்ணுடன் AADHAAR எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வருங்கால வைப்பு நிதி கணக்கு (PF) வைத்திருப்போர் தங்களது கணக்கில் AADHAAR JUNE 1-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையகம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் Corona Lockdown காரணமாக காலநீட்டிப்பு வேண்டும் என்று பலரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
வருங்கால வைப்புநிதி (PF) கணக்கில் AADHAAR இணைக்க September1-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தியும் படிங்க...
கொரோனா(CORONA)-வின் முக்கிய அறிகுறிகள் மாறிவிட்டது-பிரித்தானியா நிபுணர் எச்சரிக்கை..!!
0 Comments