Join Our Whats app Group Click Below Image

இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் அற்புத உணவுகள்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 இரத்தத்தை சுத்திகரிக்க உதவும் அற்புத உணவுகள்..!!

ஆரோக்கியமான சருமத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ரத்தம் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக முகப்பருக்கள், கொப்பளங்கள், தடிப்புகள் தோன்றலாம். மேலும் தூய்மையற்ற ரத்தம் ஒவ்வாமை, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை தடையின்றியும், சீராகவும் கொண்டு செல்வதற்கு இரத்த சுத்திகரிப்பு முக்கியமானது. சில வகை உணவு பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் ரத்தத்தை சுத்திகரிப்பது பற்றி பார்ப்போம்.

இந்த செய்தியையும் படிங்க...

 'உருமாறிய (Corona Virus)களுக்கு'-(Greek Letters)க்களை பெயர்களாக அறிவித்துள்ளது: WHO..!!

எலுமிச்சை சாறு: ரத்தத்தை சுத்திகரிக்கஎலுமிச்சை சாறு சிறந்தது. அதில் இருக்கும் அமிலத்தன்மை உடலின் பி.எச் அளவை சமநிலைப்படுத்தும். நச்சுக்களை அகற்றவும் செய்யும். பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பிற நச்சுக்களை கொல்லும் தன்மையும் இதற்கு உண்டு. காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறை கலந்து பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மை நீங்கும். ஆரோக்கியமும் மேம்படும்.

பேக்கிங் சோடா: இதனுடன் ஆப்பிள் சிடேர் வினிகரை சேர்த்து பயன்படுத்தலாம். இந்த கலவை பி.எச். சீராக்க உதவும். நச்சுத்தன்மை கொண்ட ரத்தத்தில் இருந்து யூரிக் அமிலத்தை நீக்கி சுத்தப்படுத்தவும் உதவும். ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு பேக்கிங் சோடா, 3 டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகர் கலந்து பருகலாம்.

பீட்ரூட்: ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்வதற்கு பீட்ரூட் பரிந்துரைக்கப்படுகிறது. அதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் ரத்தத்தை சுத்திகரிக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். கல்லீரலின் செயல்பாடுகளையும் அதிகரிக்க செய்யும்.

வெல்லம்: இது இயற்கையாகவே ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் இரும்பு சத்து உடலில் ஆரோக்கியமான ரத்த ஓட்டத்திற்கு வழிவகை செய்யும். ரத்தக்கட்டிகளையும் நீக்க உதவும். இதுதவிர ஹீமோகுளோபின் அளவை மீட்டெடுப்பதற்கும் வெல்லம் உதவும். செரிமானத்திற்கும் துணைபுரியும்.

துளசி: ரத்தம், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட ஒட்டுமொத்த உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும் சக்தி துளசிக்கு இருக்கிறது. அனைத்து நச்சுக்களையும் சிறுநீர் மூலம் வெளியேறவும் வைத்துவிடும். தினமும் ஏழு, எட்டு துளசி இலைகளை சாப்பிடலாம். ஒரு கப் துளசி தேநீரும் பருகலாம்.

மஞ்சள்: சிறந்த கிருமி நாசினியாக விளங்கும் மஞ்சள் ரத்தத்தில் உள்ள நச்சுக்கூறுகளை சுத்தம் செய்வதற்கும் உதவும். பாலுடன் மஞ்சள் கலந்து பருகலாம்.

இந்த செய்தியையும் படிங்க...

கொரோனா வைரஸ் தடுப்பூசி கேள்விகளும், பதில்களும்..!!

உடல் உறுப்புகளுக்குள் ஆக்சிஜன், ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றை எடுத்து செல்வது ரத்தத்தின் பணிகளில் ஒன்றாகும். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ரத்தம் நச்சுத்தன்மையற்றதாக இருக்க வேண்டும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுவது போலவே உடலுக்குள் இருக்கும் ரத்தத்தை சுத்திகரிப்பதும் முக்கியமானது. கல்லீரல், சிறுநீரகங்கள் போன்ற உறுப்புகள் சுத்திகரிப்பு பணிகளை செய்கின்றன.

Post a Comment

0 Comments