Join Our Whats app Group Click Below Image

"குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைத்துவிட்டால், அது, பள்ளிகளை மீண்டும் திறக்க வழிவகுக்கும்"..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 "குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைத்துவிட்டால், அது, பள்ளிகளை மீண்டும் திறக்க வழிவகுக்கும்"..!!

"குழந்தைகளுக்கான தடுப்பூசி கிடைத்துவிட்டால், அது, பள்ளிகளை மீண்டும் திறக்க வழிவகுக்கும்," என, எய்ம்ஸ் இயக்குனர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.நம் நாட்டில் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து குறைந்து வருகிறது. இதற்கிடையே, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 

இந்த செய்தியையும் படிங்க... 

Delta Plus Virus - "கவலைப்பட வேண்டிய வைரஸ்"..?? எப்படித் தப்பிப்பது..??

 எனினும், குழந்தைகளுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது.எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:நம் நாட்டில், குழந்தை களுக்கான தடுப்பூசிகள் விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது.'பாரத் பயோடெக்' நிறுவனத்தின், 2 - 18 வயதினருக்கான, 'கோவாக்சின்' தடுப்பூசி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதன் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளின் தரவுகள், செப்டம்பரில் கிடைத்துவிடும்.

அதற்கு, இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், உடனடியாக அந்த தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு செலுத்தும் பணிகள் துவங்கப்படும்.சாதனைஅதற்கு முன், அமெரிக்காவின் 'பைசர்' நிறுவன தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்துவிட்டால், அதுவும் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் கிடைத்து விட்டால், அது ஒரு மைல்கல் சாதனையாக அமையும். பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு, இந்த தடுப்பூசிகள் வழிவகுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments