Join Our Whats app Group Click Below Image

2021-22-ம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப் பு:தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

2021-22-ம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்பு :தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கொரோனா ஊரடங்கால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கல்விக் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியிருக்கும் நிலையிலும், தனியார் பள்ளிகள் தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்த செய்தியையும் படிங்க...   

 ஜூலை 6: முதல்வரை சந்திக்கும் தனியார் பள்ளி சங்கத்தின் நிர்வாகிகள்..!! 

மேலும் 2021-22-ம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள, கட்டண பாக்கியை செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். அதே சமயம் இந்த ஆண்டுக்கான புத்தகங்களை வழங்கி ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள தேவையான உபகரணங்களையும், இணையதள வசதிகளையும் கொரோனா நிவாரண உதவியாக அரசு வழங்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு மாதந்தோறும் இலவச கண் பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...   

 ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை தீவிரம்..!!

இந்த வழக்கு இன்று உயர் நீதிமன்றம் தலைமை நிதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் தரப்பை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவிற்கு அடுத்த வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Post a Comment

0 Comments