Join Our Whats app Group Click Below Image

கொரோனா கூடுதல் கட்டணம்: புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 கொரோனா கூடுதல் கட்டணம்: புகார் அளிக்க இலவச தொலைபேசி எண் அறிவிப்பு..!!

தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுமானால் அது குறித்து புகார் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

 இந்த செய்தியையும் படிங்க....

கருப்பு பூஞ்சை நோய் என்றால் என்ன..?? அறிகுறிகள் என்ன..??  

தனியார் பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை குறைத்து புதிய கட்டண விகிதத்தை தமிழக அரசு நேற்று அறிவித்தது. அதன்படி தனியார் பரிசோதனை மையங்களில், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் 800 ரூபாயில் இருந்து 550 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகளாக இல்லாதவர்கள் தனியார் பரிசோதனை மையங்களில் ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் 1,200 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க.... 

கொரோனா,கேன்சர் -நோய்களுக்கு நவீன தொழில்நுட்ப சிகிச்சை..!!  

இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆய்வகங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அறிவித்துள்ளது. அதன்படி, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆய்வகங்கள் குறித்து 1800 4243 993 என்ற கட்டணமில்லா எண்ணிலோ அல்லது 104 என்ற கட்டணமில்லா எண்ணிலோ, பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்றும், அரசு அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments