Join Our Whats app Group Click Below Image

கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையான குழந்தைகள்- அமைச்சர் ஸ்மிருதி இராணி வேதனை..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையான குழந்தைகள்- அமைச்சர் ஸ்மிருதி இராணி வேதனை..!!

 


அமைச்சர் ஸ்மிருதி இராணி:

நாடு முழுவதும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மட்டும் சுமார் 577 குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையாகியுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க...

ஆன்லைன் வகுப்புகள்  தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள்- ஆசிரியர்களுக்கு  வகுக்கப்படாதது ஏன்..?? 

கொரோனா வைரசின் 2ஆம் அலை தற்போது இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையைவிட 2ஆம் அலையில் வைரஸ் பாதிப்பின் தீவிரம் அதிகமாக உள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தங்களது பெற்றோர்களை இழந்து பாதிப்புக்கு உள்ளாகி உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் ஆதரவும், பாதுகாப்பும் வழங்க அரசாங்கம் உறுதி மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்:

ஆதரவற்ற குழந்தைகளை நிறுவனம் சாரா பராமரிப்புக்காக ஒரு மாவட்டத்திற்கு ரூ .10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அவை ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட நீதவான் மூலம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

எங்கள் நோக்கம் என்னவென்றால், ஒரு குழந்தை கூட பெற்றோர்களை இழந்து சிரமப்படக்கூடாது என்பது தான். இருப்பினும், குழந்தைகளை அவர்களின் குடும்பம் மற்றும் சமூக கட்டமைப்புகளிலேயே தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை விரும்புகிறோம்.

நிதி உதவி, இலவச கல்வி:

தொற்றுநோயால் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றவர்களாகியுள்ள குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை பல மாநிலங்கள் அறிவித்துள்ள நேரத்தில், மத்திய அமைச்சின் எண்ணிக்கை வந்துள்ளது. டெல்லி, பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை நிதி உதவியைத் தவிர இலவச கல்வியை வழங்குவதாக உறுதியளித்துள்ளன. உத்தரகண்ட், கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்கள் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளன.

இந்த குழந்தைகளை கண்காணிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, மாவட்டங்களில் உள்ள நலக் குழுக்கள் மற்றும் குழந்தைகள், இளம்பருவ மனநல பராமரிப்புக்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் மூலம் ஒருங்கிணைக்க முயற்சி எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

மத்திய குழந்தைகள் நல அமைச்சகம்:

இந்த குழந்தைகளை தத்தெடுப்பதற்காக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகளுக்கு எதிராக, மே 17 அன்று மத்திய குழந்தைகள் நல அமைச்சகம் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டது. அதில், இது சிறுவர் கடத்தலுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தச் செய்திகளில் ஏராளமானவை குறித்து நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.


 அவை அனைத்தும் இதுவரை போலியானவை எனக் கண்டறிந்துள்ளோம். சைபர் பிரிவுடன் இந்த விசாரணையைத் தொடரும் மாநில காவல் துறையிடம் அனைத்து தகவல்களும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் நல இலவச எண்:

இதுபோன்ற நடவடிக்கைகளை கண்காணித்து, இந்த குழந்தைகள் மாவட்ட குழந்தைகள் நலக் குழுக்களுக்கு முன் ஆஜர்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு, மத்திய குழந்தைகள் நல அமைச்சகம் மாநிலங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 1098 என்ற குழந்தைகள் நல இலவச எண்ணிலும் மேலதிக தகவல்களைப் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments