காலையிலே இந்த பாலை குடிச்சா -கால் வலி வராது..!!
இந்த பாலை தயாரிக்க என்னென்ன பொருட்கள் தேவை என்பதை முதலில் நாம் பார்த்து விடுவோம்.
- கேழ்வரகு மாவு - 250 கிராம்,
- கருப்பு எள்ளு - 50 கிராம், சோம்பு - 2 டேபிள்ஸ்பூன்,
- கற்கண்டு - 50 கிராம்.
– முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கேழ்வரகு மாவை நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த செய்தியையும் படிங்க...
காய்களில் உள்ள -மருத்துவ குணம்..!!
அதனுடைய பச்சை வாடை போகும் அளவிற்கு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக கருப்பு எள்ளை சூடான கடாயில் கொட்டி வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிக்சியில் வறுத்த எள்ளு, சோம்பு, கற்கண்டு இந்த 3 பொருட்களையும் போட்டு நன்றாக பொடி செய்து, அந்த பொடியை வறுத்த கேழ்வரகு மாவுடன் நன்றாகக் கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். –
இந்தப் பொடியை தினசரி எப்படி பாலுடன் கலந்து குடிப்பது? பாலை காய்ச்சி ஒரு டம்ளர் அளவு சூடாக எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் 1 ஸ்பூன் அளவு நீங்கள் அரைத்த பொடியை சேர்த்து, அதில் 1/4 டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த செய்தியையும் படிங்க...
முடி உதிர்வு, பொடுகு தொல்லை இனி இல்லை..!!
0 Comments