Join Our Whats app Group Click Below Image

உஷார்...!!! இன்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 உஷார்...!!! இன்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி, இன்று முதல் பேருந்துகளில் உட்கார்ந்து மட்டுமே பயணம் செய்ய முடியும், நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை. வாடகை டாக்ஸியில் ஓட்டுநர் இல்லாமல் மூன்று பேர் செல்லலாம் என்றும், ஆட்டோக்களில் ஓட்டுநர் இல்லாமல் 2 பேர் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

ஏப்ரல் 14 முதல் ஏப்ரல் 16 வரை அந்தந்த மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா - தமிழக அரசு

திருமண நிகழ்வுகளில் 100 பேர் வரை கலந்து கொள்ளவும், இறுதி ஊர்வலத்தில் 50 பேர் பங்கு பெறவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் தியேட்டர்களில் 50% இருக்கைகள் மட்டுமே நிரப்ப வேண்டும்.

உணவகங்கள்,தேநீர் கடைகள் இரவு 11 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

இந்த செய்தியையும் படிங்க...

முக்கியச் செய்தி- தமிழகத்தில் -கரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு ...!!! 

தமிழகம் முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

 கொரோனா விதிகளை மீறுவோரிடம்- அபராதம் விதிக்கப்படும்...!!! 

பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளருடன் செயல்பட அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள், பொதுமக்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதையும் முகக்கவசம் அணிவதையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இன்று அமுலுக்கு வந்துள்ள இந்த கட்டுப்பாடுகள் வரும் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments