Join Our Whats app Group Click Below Image

கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றுவதை கண்காணிக்க -9 சிறப்பு பறக்கும் படைகள்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றுவதை கண்காணிக்க -9 சிறப்பு பறக்கும் படைகள்..!!

 கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க, ஒன்பது சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால், ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள அரசு கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்கவும், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை தவறாது கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும், தாசில்தார் மற்றும் போலீஸ் எஸ்.ஐ., நிலையிலான அலுவலர்கள் கொண்ட ஒன்பது சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள்: 

  • முகக்கசவம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
  •  வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, 
  • அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து. 
  • கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments