Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..
சித்த மருத்துவ குறிப்புகள்: கடுக்காய் பயன்கள்:
கடுக்காய் பயன்கள்
கடுக்காய் சிறு சிறு துண்டுகளாக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும், பிறகு மிதமான சூட்டில் அந்த தண்ணீரை எடுத்து புண்களைக் கழுவினால் அவை விரைவில் ஆறும்.
கடுக்காய் பொடி செய்து வெண்ணெயில் குழைத்து ஆசனவாயில் போட்டு வந்தால் மூலத்தில் உண்டாகும் புண் ஆறும்.
கடுக்காய் தூள் 100 கிராம் ,உப்பை 20 கிராம் கலந்து அதில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் அஜீரணக் கோளாறுகள் உடனே குணமாகும்.
கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ தலா 200 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கஷாயமாக்கி குடித்தால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும், அதிக ரத்தப்போக்கு உடனே நிற்கும்.
கடுக்காய், ஓமம், மாம்பருப்பு, கசகசா தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும் .இதில் இரண்டு கிராம் பொடியை எடுத்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி, உஷ்ணபேதி, வயிற்று உளைச்சல் போன்ற அனைத்தும் தீரும் .
கடுக்காய் பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
கடுக்காய் பொடி ,அதிமதுரம், வெள்ளரி விதை மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பெருக்கும், சிறுநீரக நோய்களும் தீரும்.
கடுக்காய் ,தூதுவளை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கண்பார்வையில் தெளிவு உண்டாகும்.
கடுக்காய் , தாமரைப்பூ, ஏலக்காய்- தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். தினமும் இரண்டு கிராம் பொடியை சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள், ரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.
கடுக்காய், சித்தரத்தை இரண்டையும் சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு ,மூக்கில் ஏற்பட்ட புண்கள் போன்றவை குணமாகும்.
0 Comments