Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..
சித்த மருத்துவ குறிப்புகள்: சோற்றுக்கற்றாழை:
கற்றாழையின் பயன்கள்
சோற்றுக் கற்றாழையை பருக்கள் மீது தடவி வந்தால் அவை விரைவில் விழுந்து தோல் மென்மையாகும்.
கற்றாழையை நீளவாக்கில் கீறி அதை எடுத்து கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் கண் எரிச்சல் குணமாகும்.
சோற்றுக் கற்றாழையை 7 முறை சுத்தம் செய்து, பெருங்காயத்தூள் சேர்த்து சாப்பிட்டால் மூட்டு வலி உடனே மறையும்.
சோற்றுக் கற்றாழை சாற்றில், தேன் கலந்து காய்ச்சி வடிகட்டி தினமும் சாப்பிட்டு வந்தால் கிருமிகளால் ஏற்பட்ட நோய்கள் குணமாகும் .
சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழை சோற்றை, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் கிருமித் தொற்று ஏற்படாது.
சுத்தம் செய்த சோற்றுக் கற்றாழைச் சோற்றுடன், மிளகுதூள் சேர்த்து சாப்பிட்டால் கப நோய்கள் தீரும்.
சோற்று கற்றாழை சாறில், பச்சை பயறை ஊற வைத்து காயவைத்து பிறகு கஞ்சி காய்ச்சிக் குடித்தால் வயிற்று வலி, குடல் புண், குடல் நோய்கள் அனைத்தும் தீரும்.
சோற்றுக் கற்றாழைச் சோற்றில், கடுக்காய் தூள், வெல்லம் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டால் ஓரிரு முறை பேதியாகும். இதனால், நீரடைப்பு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
சோற்றுக்கற்றாழை சோற்று, படிகாரத்தைக் கலந்து நீர் கசியும் அந்த நீரை கண்களில் வைத்துக்கொண்டால் கண் நோய் குணமாகும்.
சோற்றுக்கற்றாழையை நெருப்பில் வாட்டிப் பிழிந்து சாறு எடுத்து அதில் மூன்று சொட்டுகள் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.
0 Comments