Join Our Whats app Group Click Below Image

இளநிலை உதவியாளர் ,டைபிஸ்ட், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்ந்தெடுப்பு

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

தேர்தல் சுமையை குறைக்க இளநிலை உதவியாளர், டைபிஸ்ட், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்ந்தெடுப்பு

 தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை கடந்த மாதம் 26ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது .இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 இப்பணியில் வருவாய்த்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பணி சுமையை சமாளிக்க தேர்தல் ஆணையம் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக இளநிலை உதவியாளர்கள், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் ,பணி நியமனம் செய்ய அனுமதி அளித்துள்ளது. இந்த பணியிடங்களை மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஆன கலெக்டர்கள் நிரப்பிக்கொள்ள தேர்தல் ஆணையம் அதிகாரம் வழங்கியுள்ளது. இவ்வாறு நியமிக்கப்படும் இளநிலை உதவியாளர்கள் டைப்பிஸ்டுகளுக்கு ரூ14,640 ,பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர்களுக்கு ரூ9,664 ம் ,ஊதியமாக வழங்கலாம்.

 இவர்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் பணி நியமனம் செய்து கொள்ளலாம் .இதற்கான ஊதியத்தை குறிப்பிட்ட தலைப்பின்கீழ் பெற்றுக்கொள்ளலாம். நிதித் துறையின் அனுமதி பெற்றே வெளியிடப்படுகிறது என தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments