Join Our Whats app Group Click Below Image

மத்திய அரசு ஊழியர்களுக்கு-சம்பளத்தையும் அதிகரிக்கக்கூடும்.

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 மத்திய அரசு ஊழியர்களுக்கு -மத்திய அரசுஅறிவிப்பு

ஹோலிக்கு முன்பு ஊழியர்களுக்கு மோடி அரசு ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்ற்ன. அதாவது அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது..

இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று மத்திய அரசு வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.. மத்திய அரசு தற்போது ஊழியர்களுக்கு 17 சதவீத அகவிலைப்படி சலுகைகளை வழங்கி வருகிறது. இதை அரசாங்கம் 4 சதவீதம் அதிகரித்தால், அது மத்திய அரசு ஊழியர்களின் மொத்த கொடுப்புனவு 21 சதவீதமாக உயர்த்தும். இது ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிக்கும்.

மத்திய ஊழியர்கள் நீண்ட காலமாக அகவிலைப்படி அதிகரிப்புக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் 2021 ஜூன் வரை கொரோனா காரணமாக இதனை அதிகரிப்பதை மோடி அரசு நிறுத்தியுள்ளது. ஆனால் ஹோலி முதல் ஊழியர்களின் டிஏ அதிகரிப்பு குறித்த அறிவிப்பு இருக்கலாம் என்று தகவல்கள் உள்ளன. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Post a Comment

0 Comments