கசகசா, பூனைக்காலி விதை - தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் பொடியை தினமும் இரவில் பாலில் கலந்து குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
கொத்தமல்லியுடன், கசகசா சேர்த்து அரைத்து சாப்பிட்டால் நன்றாக தூக்கம் வரும்.
கசகசா, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு- தலா 100 கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும் .இதில் ஒரு ஸ்பூன் பொடியை காலை மாலை சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
கசகசா விழுதாக அரைத்து 10 கிராம் அளவு காலை மாலை இருவேளையும் தயிருடன் கலந்து சாப்பிட்டால் இரத்த பேதி, சீத பேதி போன்றவை குணமாகும்.
கசகசா, முந்திரி பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும், முகம் அழகு பெறும்.
கசகசா, ஓமம், மாம்பருப்பு, மாதுளை தோல், சுண்டைக்காய் வற்றல்- தலா 50 கிராம் அரைத்துக் கொள்ளவும். இதில் ஐந்து கிராம் எடுத்து கெட்டித் தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி உள்ளிட்ட அனைத்து வகையான பேதியும் உடனே நிற்கும்.
கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து கால் மூட்டுகளில் பற்று போட்டால் மூட்டு வலி உடனே குணமாகும்.
கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் அனைத்தையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
கசகசா ,ஜவ்வரிசி, பார்லி மூன்றையும் தலா பத்து கிராம் எடுத்து பச்சரிசியுடன் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால் இடுப்பு வலி குணமாகும்.
கசகசா, மிளகு ,மிளகாய் மூன்றையும் பொன்னாங்கண்ணிக் கீரையில் போட்டு கடைந்து சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும் .
கசகசாவை, முள்ளங்கி சாறில் ஊறவைத்து அரைத்து தேமல், படை, படர்தாமரை உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் அவை விரைவில் குணமாகும்.
கசகசாவை, தேங்காய்ப்பாலில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
மாதுளம் பழச்சாற்றில், கசகசாவை ஊற வைத்து தினமும் ஒரு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு தீர்ந்து சக்தி அதிகரிக்கும்.
0 Comments